Facebook Page

.

பெண்களுக்கு...


வெறி நாய்கள்

பல திரிகின்றன,

மிருகக்காட்சி சாலையின்

காவல்காரனை நம்புவது

ஒரு புறம் இருக்கட்டும்,

மான்களே ...

உங்கள் கொம்புகளை

கூராக்கிக் கொள்ளுங்கள் ...



Kanna Laddu Thinna Aasaiya Kuthu Song

எண்ணம்


பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுக்கொண்டிருந்தது.

ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார்,..“இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.

சிறுவன் முகத்தில் வியப்பு.

“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா? ” இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”..

.

அறுத்து போடுங்க....

டெல்லி ல ஒரு பெண்ணை பாலியல் பலத்காரம் பண்ணதுக்கு இன்று நாடே கொதிக்கிறது....
பிரதமர், ஜனாதிபதி என அனைவரும் இரங்கல் சொல்றாங்க ... 

டேய்.... இது போல தமிழ் நாட்டுல நிறைய நடந்து இருக்கு நம்ம மக்கள் இதுக்கு போராட்டம் பண்ணா இது போல சம்பவம் நடக்காம இருந்திருக்கும்.... 

தமிழ் நாட்டுல இருக்கற பொண்ணுகளுக்கும் கற்பு இருக்கு பிரதமர் ஜி... எப்படி இந்திய ல பிரிச்சி பாக்காம... ஒரு சட்டம் உருவாக்கி இத கட்டுபடுத்துக....

இந்த மாதிரி பண்ற பசங்கள பிடிச்சி அறுத்து போடுங்க.... 

ஆண்கள் இதற்கு ஆதரவு தருகிறோம்....

தேவதை


அட.. 

தேவதைகள் பாவாடை தாவணியிலும் வருவார்களா?

என் அக்கா மகள் சனா (எ) சஹானா





போட்டோஷாப் வேலைகள்

என்னுடைய போட்டோ  &  என்னுடைய போட்டோஷாப் வேலைகள். 



காதலியுங்கள்



மண்ணைக் 
காதலியுங்கள் 
வயிற்று பசி 
தீர்ந்து போகும் 

மரத்தைக் 
காதலியுங்கள் 
ஆரோக்கியத்தை 
அள்ளித் தரும் 

தண்ணீரைக் 
காதலியுங்கள் 
தாகத்தை 
தீர்த்துவைக்கும் 

உண்மையைக் 
காதலியுங்கள் 
உறக்கம் 
நன்றாக வரும் 

அமைதியைக் 
காதலியுங்கள் 
ஆத்மாவுக்கு 
ஆனந்தம் தரும் 

அன்பைக் 
காதலியுங்கள் 
நற் பண்பு 
நாளும் வளரும் 

அப்படியே 
அரசியல்வாதிகளே!...
மக்களைக் 
காதலியுங்கள் 
இந்த நாடு 
நாசத்திலிருந்து 
தப்பிக்கட்டும் 

அப்படியே 
மதவாதிகளே! ...
மனிதாபிமானத்தைக் 
காதலியுங்கள் 
அப்பாவிகள் 
அழிவதிலிருந்து 
காத்திடுங்கள் 

அப்படியே 
ஊழல்வாதிகளே!...
நியாயத்தைக் 
காதலியுங்கள் 
பாவம் 
இந்த உலகம் 
உயிரோடு இருக்கட்டும்

2012 உலகம் அழியுமா? பாகம் - 6



உலக அழிவு பற்றிப் பேச ஆரம்பித்த இந்தக் கணத்தில், உலக அழிவு பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை நான் உங்களுக்கு கொடுக்க வேண்டும். உலகம் அழியும் என்று நான் சொல்வதாக பலர் நினைக்கின்றனர். சிலர் நான் எழுதுவதில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து, உலகம் அழியும் என்று தீவிரமாக நம்பி, கொஞ்சம் பயம்,கொஞ்சம் பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். சரியாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாது. ஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன்  உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம்.அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது.

தேவதை




சிறு வயதில் பள்ளி விழாவில் தேவதை வேடமிட்டாய்..

சரி..

இன்னுமா வேடத்தை கலைக்காமலிருக்கிறாய் ?

வெட்கம்




வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும்

கடித்துக்கொள்கிறாய்?

உனக்கு வலிக்காதா?


வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்...

உனக்கு வலிக்குமெனில் என்னால் 

தா.....ங்கி கொள்ள முடியாது....

வடை = மதம்






பாய் கடை உழுந்து வடை

பாதிரியார் கடை நூலில் கட்டப்பட்டு

பரம குருக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு

அனுமான் கழுத்தில் பிரசாத மாலையாய்.........

ரோஜாவின் குமுறல்

அவள் கூந்தல் சேர முடியாத
ரோஜாவின் குமுறல்



ஹே பெண்ணே உன் கூந்தல் சேர
என்னால் முடியவில்லை


இந்த சவஊர்வலம் மனிதனுக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்.


நான் இன்னொரு பிறவி எடுப்பேன்
உன் வீட்டு செடியின் மகளாய் பிறந்து

உன்  கையினால் தடவப்பட்டுஉன் கூந்தலில்
சேர்ந்து இப்பிறவி பலனை அடைவேன்.


உன் கூந்தலில் சேரதுடிக்கும்
பூவிற்கும்கூட உன் மேல் காதல்..


எனக்கு இருக்க கூடாதா?

பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால்...


பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால், அதுவும் நம்ம சிங்கார சென்னை வாசியாக இருந்தால் எப்படி இருக்கும் !! !! !!
பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால் விண்டோசை "ஜன்னல்" என்றுஅழைத்திருப்பார்கள்.


அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

இந்த காதல்


இந்த காதல்
என்னை
அழகாய் காட்டுகிறது..

இந்த காதல்

என்னை
தனிமை படுத்துகிறது...

இந்த காதல்
என்னை
சந்தோஷமாய் வைக்கிறது ..

இந்த காதல்
என் இதயத்தை
துடிக்க வைக்கிறது..

இந்த காதல்
என் கண்களை
திறந்து வைக்கிறது..

இந்த காதல்
என் நகங்களில்
பூப்பூக்க வைக்கிறது..

இந்த காதல்
என்னை
அழ வைக்கிறது..

இந்த காதல்
என்னை
அடிமை படுத்துகிறது..

இந்த காதல்
என்னை
தள்ளாட வைக்கிறது..

எல்லாவற்றிற்கும் மேல்,

இந்த காதல்
பிறப்பின் ரகசியத்தையும்,
இறப்பின் அர்த்தத்தையும்
புரிய வைக்கிறது...

தாயின் துடிப்பு


உனக்காய் துடித்த ஓர் இதயம்

உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்

ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்

அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்

நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்

செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்

இன்று துடிக்கிறது!

இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!

என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?...

நான் கூட காதலிக்கிறேன்


காதல்...
இன்று புன்னகையோடு வரும்,
நாளை கண்ணீர் சிந்தவைத்து ஓடிவிடும்
என்றே நினைத்தேன்.

காதல்...
சீச்சீ, கெட்ட வார்த்தை
அது எனக்கெல்லாம் ஒத்து வராது
என்றே கர்வமாக இருந்தேன்.

காதல்...
அப்படி என்றால் என்ன?
நானாவது, காதலிப்பதாவது
என்று எகத்தாளமாகப் பேசினேன்.




காதல்...
வேண்டாமடா இந்த தொல்லை என்று
ஆண் வர்க்கத்தை விட்டே விலகியேயிருந்தேன்.

ஆனால் அந்தக் காதல் என்னையும் ஒருநாள் தீண்டியது..

சண்டைக்கோழியாய் சீறச் சென்ற நான்
அவளைப் பார்த்து சாந்தமானேன்.
ஏன் அப்படி அடங்கினேன்..?

முதலில் தெரியவில்லை அந்த உணர்வுக்கு பெயர் என்னவென்று?
அவள் சொல்லித்தான் தெரிந்தது...
அது தான் காதல் என்று.

கடைசியில் வென்றது காதல்தான்...
காதலை வெறுத்த நானும்
இன்று காதலில்...

நூறாண்டைக்கடந்த இந்திய சினிமா


கடந்த மே மாதம் 3ஆம் தேதி இந்திய சினிமாவின் நூற்றாண்டு தொடங்குகிறது. 1895 டிசம்பரில் லூமியர் சகோதரர்கள் பாரீசில் தாங்கள் தயாரித்த உலகின் முதல் சினிமா திரையிடப்பட்ட ஆறு மாதத்திற்குள்ளாகவே அதே படம் இந்தியாவில் திரையிடப்பட்டிருந்தாளும் கூட,  இராஜா ஹரிச்சந்திரா என்கிற படத்தை தாதா சாகேப் பால்கே அவர்கள் முதல் முதலில் தாயாரித்து திரையிட்ட மே 3 1913 தான் இந்திய சினிமாவின் பிறப்பாகும். வங்க மொழியில் உருவான இப்படம் மெளனப்படமாக உருவாகி அதன் பின் காலத்திற்கு ஏற்றவாறும், தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறும் இந்திய சினிமா துறை வளர்ச்சி அடைந்தது, இன்று இராஜா ஹரிச்சந்திராவின் உருவாக்கத்தையே “ஹரிச்சந்திரா பேக்ட்டரி” என்கிற சினிமாவாக அதே காலகட்டத்தை முன் வைக்கும் கலைநுட்பத்தோடு விளக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சினிமாவை கண்டுபிடித்தது இந்தியர்கள் இல்லையென்றாலும் இந்தியர்கள் தான் உலக அளவில் அதிக அளவு சினிமாக்களை தயாரித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா என்று பல்வேறு விதமான மொழிகளில் தயாராகும் இந்திய சினிமா உலகிலேயே மிகப்பெரியதாகும். இந்திய சினிமா எப்படி உருவானது என்பதே ஒரு சுவாரசியமான கதை.



எங்கும் சாதி எதிலும் சாதி



எங்கும் சாதி எதிலும் சாதி;
சாதியென்றசகதியில் குளித்து
சாதியை அடையாளமிட்டு
சமுகத்தை சூனியமாக்கும்
சூழ்ச்சிகாரர்களே...!!!!
இவர்களிடமும் கேளுங்களேன்
சாதியை....!?

படுக்கை விரித்து படுத்து
காம இச்சையை காசாக்கி
எச்சிலால் எல்லாடத்தையும்
நனைத்து எழும் விலைமகளிடம்
நீகேட்டதுண்டா.........?

இரு பால்கலப்பால்
எப்பால் என புரியாமல்
முகவரி தொலைத்த
உறவுகளிடம் கேள்;
"குறிப்பிட்ட சாதியிலிருந்து
மட்டும்தான்
வந்தீர்களா.............?"

2012 உலகம் அழியுமா? பாகம் - 5


கடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி விளக்கமாகச் சொல்லவேண்டும் என்பதற்காக, அவர்களின் கணிதத்தை அதிகமாக விளக்கியது,பலருக்குப் புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப் புரிய வேண்டியது, மாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான்.

அமெரிக்கா என்று சொல்லப்படும் மிகப் பெரி நிலப்பரப்பு, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று மூன்று பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா, கொண்டுராஸ், பனாமா, நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. 'உலக அழிவுப்புகழ்' மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்திய அமெரிக்கநாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில்ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீபரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.


காதல்



காதல்
  நகத்தைப் போன்றது
  வெட்ட வெட்ட
  வளரும்!


காதல்
  நகச்சாயம் போன்றது
  கை சேர்ந்தால் மட்டுமே
  பயன்!




காதல்
  கைரேகையைப் போன்றது
  மனதின்
  அழியா ரேகைகள்!


காதல்
  விதிவிலக்கு
  விதிவிலக்குகளை
  உதாரணம் காட்டக்கூடாது..

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?



மேஷம் 

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.


ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.


காதல் வலி


முள் இல்லாத ரோஜாவை தூவுங்கள் 

என் மரண ஊர்வலத்தில்.. 

வந்தாலும் வருவாள் 

என் காதலி ! 

பாவம் அவளின் பாதங்கள்..



என் இனிய நாட்கள்


சோகங்கள் என்னை மிதிக்கும்போது 
என்னுள் தனிமை பிறக்கிறது 
அப்போதுதான் இனிமையாக 
என் உயிரினும் மேலான நட்பு பிறந்தது ! 

என்கண்கள் ஈரமாகும்போதுல்லாம் 
உனது கரங்கள் என்னை தாங்குது! 
வாழ்க்கையில் வழுக்கி விழும்போதெல்லாம் 
என்னை இழுத்துபிடித்த நண்பனே ... 
நீ என்கண்களின் பார்வையாக இருக்கிறாய் ! 

தமிழா.. ஒரு நிமிடம் ....




தமிழா ......!
நீ
தமிழா ....?

குட் மார்னிங் முதல் குட் நைட் வரை
தமிழ் மேல் உனக்கு
ஏன் இந்த கொலை வெறி .....

உன் இயல்பான வாழ்க்கையில்
தமிழும் இற(ரு)ந்து வருகிறது .....

உன் வாழ்க்கை தரம் உயர்ந்ததும்
உன் தாயையும் தாய் மொழியையும்
கைவிடுகிறாய்....
மீண்டும் உன்னை ஏற்றுகொள்ள
உன் தாய் யோசிக்கலாம் ...
தாய் மொழி யோசிக்காது... !

இயற்கையை விரட்டியடித்து விடலாம்
என்று நினைக்கிறாய் ....
அதன் சீற்றத்தை உன்னால் தாங்க முடியாது...!
இயற்கையும் தமிழும் ஒன்று தான்...

உலகம் போற்றும் தமிழை ஏன்
உன் உள்ளம் போற்ற வில்லை ...!
நீ போற்ற வேண்டாம்..
உன் தலைமுறையிலும் நடை முறையிலும்
தமிழை ஊட்டு...

தடுமாற்றமான வாழ்கையில்
"தமிழா" நீ
தமிழன் தான் என்பதை மறந்து விடாதே..!

காதல் கீதாசாரம்...





யாரை நீ காதலித்தாயோ...
அவள் வேறொருவனைக் காதலித்தாள்...
யாரை நீ காதலிக்கின்றாயோ...
அவள் வேறொருவனைக் காதலிக்கின்றாள்...
யாரை நீ காதலிக்கப் போகின்றாயோ...
அவளும் வேறொருவனையே காதலிப்பாள்...

2012 உலகம் அழியுமா? பாகம்-4



மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாகபதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர்.அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டு, மீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன்.
இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள்,பகுத்தறிவுவாதி அல்லாதவர்கள் என்னும் இரண்டு வகையாகப் பிரிந்தேவாழ்கிறார்கள். இங்கு பகுத்தறிவு என்று நான் சொல்வது நாத்திகத்தை அல்ல. பலர் பகுத்தறிவையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கித் தமக்குள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். பகுத்தறிவின் ஒரு அங்கமாகத்தான் நாத்திகம் இருக்கிறது. ஒரு பகுத்தறிவுவாதி, நாத்திகராக இருப்பார்.ஆனால் ஒரு நாத்திகர் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பையும் தாண்டி,பல மூடநம்பிக்கைகளையும் மறுக்கிறது.

100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா: பொக்கிஷமாக கிடைத்த படங்கள்!



100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்….எப்படி துள்ளுவீர்கள்?
இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..
அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா…

2012 உலகம் அழியுமா? பாகம் - 3


நான் இந்தத் தொடரை, மாயா இனத்தவர் சொல்லியபடி, '2012 இல் உலகம்அழியுமா? இல்லையா?' என ஆராய்வதற்காகவே ஆரம்பித்தேன். ஆனால் மாயா பற்றி எதுவுமே சொல்லாமல், ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். மாயா இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதன் பேரில், உலகம் அழியும் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்? இந்தப் பயம்அறிவியலாளர்களிடையே கூட, இரண்டாகப் பிரிந்து விவாதிக்கும் அளவுக்குப் பெரிதாகியதன் காரணம் என்ன? அந்த அளவுக்கு இந்த மாயாக்கள் முக்கியமானவர்களா? என்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடும்போது, உலகத்தில் நடைபெற்ற பல மர்மங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும்.

2012 உலகம் அழியுமா? பாகம் - 2


"கடந்த தொடரில் ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு, அந்தப் படத்துக்கும், ராக்கெட்டுக்கும் (Rocket) சம்பந்தம் இருப்பதாகச் சொல்வதை எல்லாம் நாம் எப்படி நம்புவது? சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருப்பது ஏதோ ஒரு விதமான சித்திரம் அவ்வளவுதான்" என்று நீங்கள் நினைப்பீர்கள். அதில் தவறும் இல்லை. நானும் ஆரம்பத்தில் அப்படியேதான் நினைத்தேன், மாயா மக்களை முழுமையாக அறியும் வரை.

அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன).


Gangster Billa 2 - video song....




                                     


பில்லா 2 என்பது 2012இல் வெளிவர இருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம்.அஜீத் குமார் நடிக்கும் இப்படத்தை சக்ரி இயக்குகிறார். ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு பன்னாட்டுக் கொள்ளைக்காரனாக மாறினார் என்பதே இத்திரைப்படத்தின் கதை .

எந்த வீடியோ அணைத்து அஜித் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம்.......... தீப்பொறி  தீபன் .............

2012 உலகம் அழியுமா? பாகம் - 1



இதோ 2012ம் ஆண்டு பிறந்து விட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.




"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.

பில்லா 2 - சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க்


சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜித் குமர் நடித்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. ஏற்கனவே பில்லா 2 திரைப்படத்தின் டிரைலருக்கு இணையத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது.


லட்சக்கணக்கில் பல பேரை கவர்ந்து சாதனை படைத்து வருகிறது படத்தின் டிரையிலர்.
டிரையிலர் வெளியாகி ஒரு சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சிகள்தான்.

மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சிதான் அது.

இந்த அனுபவம் பற்றி பில்லா 2 படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான கீசா காம்பக்தீ கூறியதாவது:

உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்...!?



  
உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'Einstein: His Life And Universe', என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

காதலில் உள்ள டெக்னிக் உங்களுக்கு தெரியுமா?





காதலிப்பது பெரிய விசயமில்லை, அந்த காதலை வெற்றிகரமாக்குவதில்தான் இருக்கிறது சூட்சுமம். நிறைய பேருக்கு அதன் டெக்னிக் தெரிவதில்லை. என்ன செய்தால் காதலில் வெற்றி பெறலாம் என்பது தெரியாமல் இருப்பதால்தான் நிறைய காதல்கள் தோற்றுப்போகின்றன. இது குறித்து நடைபெற்ற ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. சுவாசப் புத்துணர்ச்சி பெரும்பாலான காதல் தோற்றுப் போனதற்கு வாய் துர்நாற்றம் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே சுத்தமாக பல்விலக்கிவிட்டு சுவாசப் புத்துணர்ச்சியோடு இருந்தாலே காதல் வெற்றி பெரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
காதலியின் செல்லப்பிராணி
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹஸ்டன் பல்கலையின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காதல் வெற்றிக்கு காதலி வளர்க்கும் நாய் முக்கிய பங்கு வகிக்கிறதாம். 120 ஜோடிகளிடம் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டது.
நாயை நேசியுங்கள்
நாய் வளர்ப்பதில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உணர்வு ரீதியாக பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு ஆண் செல்லப் பிராணி ஒன்றை வளர்க்கும் போது தனது காதலியும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் தான் வளர்க்கும் நாயை தனது காதலனும் அளவுக்கு அதிகமாக நேசிக்க வேண்டும் என எதிர்பார்கிறாள்.
                                   

எனவே காதலில் வெற்றி பெற உங்களின் காதலி ஆசை ஆசையாக வளர்த்து வருகின்ற நாயை நீங்கள் நன்றாக நேசியுங்கள் அதன் மீது அன்பு செலுத்துங்கள் உங்களின் காதல் தானாகவே வளரும். அப்படி உங்களால் நேசிக்க முடியாவிட்டால் கூட நாயை நேசிப்பது போல் ஆவது நடியுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

என் முதல் காதல் - கவிதை....




என் முதல் காதல்
என்னை முற்றும் மறக்கவைத்த
காதல்.......

கண்டேன் உன்னை- நீ
என் கண்களுக்குள் புகுந்து- என்
இதயத்தில் அமர்ந்து கொண்டாய்.....

கண்களை நான் - மூடவும்
பயந்தேன் - நான்
கண்மூடும் நேரத்தில் நீ
என் பார்வையிலிருந்து விலகிபோவாய் என்று...

அந்த நாட்களில் - உனக்கு
கவிதை வடிக்க - நான்
பேனா எடுத்தேன் என் முதல் - காதலுக்கு
என் முதல் கன்னி கவிதை.....

அப்போது தட்டு தடுமாறி - சில
எழுதுக்கள் விட்டு விடுபட்டு - என்
முதல் குறைபிரசவ கவிக்குழந்தையை - உனக்காய்
நான் பிரசவித்தேன்.......

அதுதான் என் முதல் கவிதை
"நீ வேண்டும் எனக்கு"

தல தல தான்....பில்லா - 2 விற்பனையில் சாதனை!



அஜீத் நடித்துள்ள பில்லா 2 திரைப்படம், ரிலீசுக்கு முன்பே வர்த்தகத்தில் புதிய சாதனைப் படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒவ்வொன்றுமே பெரும் விலைக்கு பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் இரு ட்ரையிலர்களை வெளியிட்டனர். யு ட்யூபில் வெளியான இந்த டிரைலர்களுக்கு ஏக வரவேற்பு.
வெளியான ஒரு நாளைக்குள் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட இந்த ட்ரைலர்களைப் பாராட்டி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
ட்ரைலருக்கே இப்படி என்றால், படம் வெளியாகும்போது எப்படி இருக்கும்...
'இது ச்சும்மா ட்ரைலர்தானம்மா... மெயின்பிக்சர் பாருங்க மிரண்டு போவீங்க' என்று ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர், அஜீத் ரசிகர்கள்

உண்மை ரகசியம் - தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.


தற்போதைய தாஜ்மஹால் வரலாறு......








 


ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.
அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். 
   சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ். 
   சாஜஹானின் மனைவியன் பெயர்கள் என்ன? சாஜஹானின் மனைவி மும்தாஜ் எவ்வாறு இறந்தார்?  
   மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில் முதலாமவர் அக்பர்பாடி மஹால் அடுத்தவர் கண்டாரி மஹால் மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.  
 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates