Facebook Page

.

காதல் என்ன செய்யும்....நீ என்ன அவ்ளோ பெரிய.......?




காதல்.....

அழைக்கபடாத விருந்தாளி!
நான் அரவணைத்து கொண்ட
குழந்தை,
என்னை கவிஞன் ஆக்கிய
ஆன்மா....
காதல் காதல் காதல் !

தேவதைகள் ஆயிரம்
தெருவிறங்கி வந்தாலும்
மனம் ஓடாது அவளை விட்டு
ஆதலினால்
காதல் கொள்கை வெல்லும் !


அழுக்காக்கபட்ட எனது -ஆடைகள்
அவள் பார்வையிலே
சலவை செய்யப்படும்
ஆதலினால்
காதல் சலவை செய்யும் !

பூங்காவில் பூக்களுக்கு
பட்டாம்பூச்சிகள் முத்தம் கொடுக்கும்
போதெல்லாம்-என்
உதடுகளுக்கு பசியெடுக்கும்
ஆதலினால்
காதல் பட்டினி செய்யும் !

பங்குனி வெயில் படை எடுத்தாலும்
சுடுவது இல்லை எம்மை
ஆதலினால்
காதல் குளிர்மை கொள்ளும் !

எத்தனை தடவைகள்
சண்டை போட்டாலும்
ரத்தம் காண்பதில்லை
ஆதலினால்
காதல் புனிதம் செய்யும் !

தென்றல் வீசும் தருணங்களில்
புனிதம் வேறு
முகம் பெறும் ,
உதடுகள் பசி தீர்க்கும்,
மொட்டுக்கள் பூவாகும் ,
உதடுகள் உரசவென்று காதல் தவம்
கிடக்கும் !
ஆதலினால்
காதல் பூகம்பத்தை உண்டு பண்ணும் பூ

நான் ராசா
அவள் ராணியென
காதல் கொள்கை கொண்டு
காதல் ராஜாங்கம்
செய்து கொள்கிறோம் !
 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates