Facebook Page

.

நூறாண்டைக்கடந்த இந்திய சினிமா


கடந்த மே மாதம் 3ஆம் தேதி இந்திய சினிமாவின் நூற்றாண்டு தொடங்குகிறது. 1895 டிசம்பரில் லூமியர் சகோதரர்கள் பாரீசில் தாங்கள் தயாரித்த உலகின் முதல் சினிமா திரையிடப்பட்ட ஆறு மாதத்திற்குள்ளாகவே அதே படம் இந்தியாவில் திரையிடப்பட்டிருந்தாளும் கூட,  இராஜா ஹரிச்சந்திரா என்கிற படத்தை தாதா சாகேப் பால்கே அவர்கள் முதல் முதலில் தாயாரித்து திரையிட்ட மே 3 1913 தான் இந்திய சினிமாவின் பிறப்பாகும். வங்க மொழியில் உருவான இப்படம் மெளனப்படமாக உருவாகி அதன் பின் காலத்திற்கு ஏற்றவாறும், தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறும் இந்திய சினிமா துறை வளர்ச்சி அடைந்தது, இன்று இராஜா ஹரிச்சந்திராவின் உருவாக்கத்தையே “ஹரிச்சந்திரா பேக்ட்டரி” என்கிற சினிமாவாக அதே காலகட்டத்தை முன் வைக்கும் கலைநுட்பத்தோடு விளக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சினிமாவை கண்டுபிடித்தது இந்தியர்கள் இல்லையென்றாலும் இந்தியர்கள் தான் உலக அளவில் அதிக அளவு சினிமாக்களை தயாரித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா என்று பல்வேறு விதமான மொழிகளில் தயாராகும் இந்திய சினிமா உலகிலேயே மிகப்பெரியதாகும். இந்திய சினிமா எப்படி உருவானது என்பதே ஒரு சுவாரசியமான கதை.



எங்கும் சாதி எதிலும் சாதி



எங்கும் சாதி எதிலும் சாதி;
சாதியென்றசகதியில் குளித்து
சாதியை அடையாளமிட்டு
சமுகத்தை சூனியமாக்கும்
சூழ்ச்சிகாரர்களே...!!!!
இவர்களிடமும் கேளுங்களேன்
சாதியை....!?

படுக்கை விரித்து படுத்து
காம இச்சையை காசாக்கி
எச்சிலால் எல்லாடத்தையும்
நனைத்து எழும் விலைமகளிடம்
நீகேட்டதுண்டா.........?

இரு பால்கலப்பால்
எப்பால் என புரியாமல்
முகவரி தொலைத்த
உறவுகளிடம் கேள்;
"குறிப்பிட்ட சாதியிலிருந்து
மட்டும்தான்
வந்தீர்களா.............?"

2012 உலகம் அழியுமா? பாகம் - 5


கடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி விளக்கமாகச் சொல்லவேண்டும் என்பதற்காக, அவர்களின் கணிதத்தை அதிகமாக விளக்கியது,பலருக்குப் புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப் புரிய வேண்டியது, மாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான்.

அமெரிக்கா என்று சொல்லப்படும் மிகப் பெரி நிலப்பரப்பு, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று மூன்று பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா, கொண்டுராஸ், பனாமா, நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. 'உலக அழிவுப்புகழ்' மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்திய அமெரிக்கநாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில்ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீபரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.


காதல்



காதல்
  நகத்தைப் போன்றது
  வெட்ட வெட்ட
  வளரும்!


காதல்
  நகச்சாயம் போன்றது
  கை சேர்ந்தால் மட்டுமே
  பயன்!




காதல்
  கைரேகையைப் போன்றது
  மனதின்
  அழியா ரேகைகள்!


காதல்
  விதிவிலக்கு
  விதிவிலக்குகளை
  உதாரணம் காட்டக்கூடாது..

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?



மேஷம் 

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.


ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.


 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates